முதல்–அமைச்சர் கோப்பை தடகளம்: பெண்கள் பிரிவில் சென்னை அணி ‘சாம்பியன்’


முதல்–அமைச்சர் கோப்பை தடகளம்: பெண்கள் பிரிவில் சென்னை அணி ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 27 April 2018 8:51 PM GMT (Updated: 27 April 2018 8:51 PM GMT)

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்–அமைச்சர் கோப்பைக்கான மாநில தடகள போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் 3 நாட்கள் நடந்தது.

சென்னை, 

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்–அமைச்சர் கோப்பைக்கான மாநில தடகள போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் 3 நாட்கள் நடந்தது. இதில் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் திருவள்ளூர் வீரர் எஸ்.ரிஷ்வாந்த் முதலிடமும், 110 மீட்டர் தடை ஓட்டத்தில் மதுரை வீரர் சந்தோஷ் முதலிடமும், நீளம் தாண்டுதலில் சென்னை வீரர் விஷ்ணு முதலிடமும் பிடித்தனர். பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் ஸ்ரீதாவும் (சென்னை), 100 மீட்டர் தடை ஓட்டத்தில் நித்யாவும் (கோவை), 400 மீட்டர் ஓட்டத்தில் வித்யாவும் (ஈரோடு), நீளம் தாண்டுதலில் ஹர்ஷினியும் (சென்னை), உயரம் தாண்டுதலில் கிரேஸ் நாக்மெர்லியும் (கன்னியாகுமரி), குண்டு எறிதலில் கீர்த்திகாவும் (தஞ்சாவூர்) முதலிடமும் பெற்றனர். இதன் ஆண்கள் பிரிவில் கோவை மாவட்டம் 25 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. நெல்லை (10 புள்ளிகள்) 2–வது இடம் பிடித்தது. பெண்கள் பிரிவில் சென்னை மாவட்ட அணி (20 புள்ளிகள்) சாம்பியன் பட்டத்தை வென்றது. ஈரோடு மாவட்ட அணி (11 புள்ளிகள்) 2–வது இடம் பெற்றது. இந்த போட்டியில் முதலிடம் பிடித்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், 2–வது இடம் பெற்றவர்களுக்கு ரூ.75 ஆயிரமும், 3–வது இடம் பெற்றவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் ரொக்கப்பரிசாக வழங்கப்பட்டது. மொத்தம் ரூ.45 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.


Next Story