புரோ கபடி: டெல்லி அணி 4-வது வெற்றி


புரோ கபடி: டெல்லி அணி 4-வது வெற்றி
x
தினத்தந்தி 6 Aug 2019 12:08 AM GMT (Updated: 6 Aug 2019 12:08 AM GMT)

புரோ கபடி போட்டியில், டெல்லி அணி 4-வது வெற்றியை பதிவு செய்தது.

பாட்னா,

புரோ கபடி லீக் தொடரில் பாட்னாவில் நேற்றிரவு நடந்த 27-வது லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின. இதில் டெல்லி அணி 35-24 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தியது. 5-வது ஆட்டத்தில் ஆடிய டெல்லி அணி பெற்ற 4-வது வெற்றி இதுவாகும். 5-வது ஆட்டத்தில் களம் கண்ட ஜெய்ப்பூர் அணி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும். மற்றொரு ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ்-புனேரி பால்டன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் புனேரி பால்டன் அணி 33-31 என்ற புள்ளி கணக்கில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணியை சாய்த்தது. 5-வது ஆட்டத்தில் ஆடிய புனேரி பால்டன் அணி பெற்ற 2-வது வெற்றி இது. 5-வது ஆட்டத்தில் ஆடிய குஜராத் அணி சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும்.

இன்று ஓய்வு நாளாகும். நாளை (புதன்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டங்களில் தமிழ் தலைவாஸ்-உ.பி.யோத்தா (இரவு 7.30 மணி), பாட்னா பைரட்ஸ்-அரியானா ஸ்டீலர்ஸ் (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.

Next Story