இந்தியாவில் நடக்கும் கிரிக்கெட் போட்டிக்கான டைட்டில் ஸ்பான்சர்ஷிப் உரிமத்தை பெற்றது ‘பேடியம்’


இந்தியாவில் நடக்கும் கிரிக்கெட் போட்டிக்கான டைட்டில் ஸ்பான்சர்ஷிப் உரிமத்தை பெற்றது ‘பேடியம்’
x
தினத்தந்தி 21 Aug 2019 9:45 PM GMT (Updated: 21 Aug 2019 9:41 PM GMT)

இந்தியாவில் அடுத்த 4 ஆண்டுகள் (2019-23) நடக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் முதல்தர கிரிக்கெட் போட்டிக்கான டைட்டில் ஸ்பான்சர்ஷிப் உரிமத்தை மின்னணு பணபரிவர்த்தனை நிறுவனமான ‘பேடியம்’ பெற்றுள்ளது.

மும்பை, 

இந்தியாவில் அடுத்த 4 ஆண்டுகள் (2019-23) நடக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் முதல்தர கிரிக்கெட் போட்டிக்கான டைட்டில் ஸ்பான்சர்ஷிப் உரிமத்தை மின்னணு பணபரிவர்த்தனை நிறுவனமான ‘பேடியம்’ பெற்றுள்ளது. இதனால் இந்தியாவில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகள் ‘பேடியம் தொடர்’ என்று அழைக்கப்படும். இதற்காக இந்த 4 ஆண்டுக்கும் அந்த நிறுவனம் ரூ.326.80 கோடி இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு வழங்கும். அதாவது சராசரியாக ஒவ்வொரு ஆட்டத்துக்கும் ரூ.3.8 கோடி செலுத்த வேண்டி இருக்கும். இது கடந்த உரிமத்தை விட 58 சதவீதம் (முன்பு ஒரு ஆட்டத்துக்கு ரூ.2.4 கோடி) அதிகமாகும்.

Next Story