உலக இளையோர் செஸ்: சென்னை வீரர் பிரக்யானந்தா முன்னிலை


உலக இளையோர் செஸ்: சென்னை வீரர் பிரக்யானந்தா முன்னிலை
x
தினத்தந்தி 11 Oct 2019 10:50 PM GMT (Updated: 11 Oct 2019 10:50 PM GMT)

உலக இளையோர் செஸ் போட்டியில், சென்னை வீரர் பிரக்யானந்தா முன்னிலை பெற்றார்.

மும்பை,

உலக இளையோர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதில் 10-வது சுற்று ஆட்டங்கள் நேற்று நடந்தது. 18 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் கிராண்ட்மாஸ்டரான சென்னையைச் சேர்ந்த பிரக்யானந்தா, லிதுவேனியாவின் பாவ்லிஸ் பல்டினிவிசியசை எதிர்கொண்டார். இதில் வெள்ளை நிற காய்களுடன் ஆடிய பிரக்யானந்தா 63-வது காய் நகர்த்தலில் வெற்றி பெற்று மொத்தம் 8.5 புள்ளிகளுடன் தங்கப்பதக்கம் வெல்லும் வாய்ப்பை நெருங்கியுள்ளார். அடுத்த இடத்தில் ஆர்மேனியா வீரர் ஷந்த் சர்க்ஸ்யான் (8 புள்ளி) உள்ளார். இன்று 11-வது மற்றும் கடைசி சுற்று ஆட்டம் நடக்கிறது.

Next Story