சர்வதேச செஸ்: சென்னை வீரர் ஹர்ஷவர்தன் முன்னிலை


சர்வதேச செஸ்: சென்னை வீரர் ஹர்ஷவர்தன் முன்னிலை
x
தினத்தந்தி 21 Jan 2020 11:42 PM GMT (Updated: 21 Jan 2020 11:42 PM GMT)

சர்வதேச செஸ் போட்டியில், சென்னை வீரர் ஹர்ஷவர்தன் முன்னிலை பெற்றுள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு செஸ் சங்கம் சார்பில் டாக்டர் என்.மகாலிங்கம் கோப்பைக்கான 12-வது சென்னை ஓபன் சர்வதேச கிராண்ட்மாஸ்டர் செஸ் போட்டி சோழிங்கநல்லூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்து வருகிறது. 10 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் நேற்று 5-வது சுற்று நடந்தது.

இதில் சென்னையைச் சேர்ந்த பள்ளி மாணவர் ஹர்ஷவர்தன், உக்ரைன் கிராண்ட்மாஸ்டர் போக்டானோவிச் ஸ்டானிஸ்லாவுக்கு அதிர்ச்சி அளித்து வெற்றி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் சென்னை வீரர் பிரனவ் 49-வது காய் நகர்த்தலில் உக்ரைன் மூத்த வீரர் நெவிரோவ் வாலரியை தோற்கடித்து அசத்தினார். 5 சுற்று முடிவில் ஹர்ஷவர்தன், மார்ட்டினஸ் அல்கன்தரா (பெரு), விசாக் (இந்தியா) ஆகியோர் தலா 5 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கிறார்கள். பிரனவ் உள்பட 5 வீரர்கள் 4.5 புள்ளிகளுடன் அடுத்த இடத்தில் உள்ளனர்.

Next Story