அகில இந்திய கூடைப்பந்து: இறுதிப்போட்டியில் தமிழக அணி


அகில இந்திய கூடைப்பந்து: இறுதிப்போட்டியில் தமிழக அணி
x
தினத்தந்தி 10 March 2020 11:21 PM GMT (Updated: 10 March 2020 11:21 PM GMT)

அகில இந்திய கூடைப்பந்தின் இறுதிப்போட்டிக்கு தமிழக அணி தகுதிபெற்றது.

சென்னை,

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் 44-வது அகில இந்திய மின்வாரிய அணிகள் இடையிலான கூடைப்பந்து போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்க வளாகத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் கேரளா அணி 67-29 என்ற புள்ளி கணக்கில் அரியானாவை எளிதில் தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. 2-வது அரைஇறுதிப்போட்டியில் தமிழக அணி 66-58 என்ற புள்ளி கணக்கில் பஞ்சாப்பை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. தமிழக அணியில் சிவக்குமார் 39 புள்ளியும், ரவிச்சந்திரன் 11 புள்ளியும் குவித்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர். இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு-கேரளா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. காலை 7 மணிக்கு நடைபெறும் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் அரியானா-பஞ்சாப் அணிகள் சந்திக்கின்றன.

Next Story