விளையாட்டு துளிகள்...


விளையாட்டு துளிகள்...
x
தினத்தந்தி 25 Sep 2020 10:15 PM GMT (Updated: 25 Sep 2020 7:49 PM GMT)

கொரோனா அச்சம் காரணமாக கடந்த மார்ச் மாதத்துக்கு பிறகு நியூசிலாந்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை.

* கொரோனா அச்சம் காரணமாக கடந்த மார்ச் மாதத்துக்கு பிறகு நியூசிலாந்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. தற்போது அங்கு சர்வதேச கிரிக்கெட் போட்டியை கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடத்த அந்த நாட்டு அரசு பச்சைக்கொடி காட்டி இருக்கிறது. இதனை அடுத்து நவம்பர் மாதம் முதல் வெஸ்ட்இண்டீஸ் அணியும், அடுத்து பாகிஸ்தான் அணியும் நியூசிலாந்து சென்று டெஸ்ட் மற்றும் 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடுகிறது. இதற்கான போட்டி அட்டவணை அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

* ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியா சென்று ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட திட்டமிட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து நியூசிலாந்து அணியும் அங்கு சென்று 3 ஒருநாள் போட்டியில் மோத இருந்தது. இந்த இரண்டு போட்டி தொடர்களும் தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது.


Next Story