சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை ஜோதி கால்இறுதிக்கு முன்னேற்றம்


சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை ஜோதி கால்இறுதிக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 24 Feb 2021 11:40 PM GMT (Updated: 24 Feb 2021 11:40 PM GMT)

சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை ஜோதி கால்இறுதிக்கு முன்னேறினார்.

புதுடெல்லி, 

சர்வதேச குத்துச்சண்டை போட்டி பல்கேரியாவில் உள்ள சோபியா நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவில் 2-வது சுற்றில், 2017-ம் ஆண்டு உலக இளையோர் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவரான இந்திய வீராங்கனை ஜோதி குலியா, 2 முறை உலக சாம்பியனான கஜகஸ்தானின் நசிம் ஜைபியை சந்தித்தார். இதில் அரியானாவை சேர்ந்த ஜோதி 3-2 என்ற கணக்கில் நசிம் ஜைபிக்கு அதிர்ச்சி அளித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.

Next Story