ஒலிம்பிக் திட்டத்தில் பாய்மர படகு வீரர், வீராங்கனை சேர்ப்பு


ஒலிம்பிக் திட்டத்தில் பாய்மர படகு வீரர், வீராங்கனை சேர்ப்பு
x
தினத்தந்தி 17 April 2021 2:00 AM GMT (Updated: 17 April 2021 2:00 AM GMT)

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ள வீரர், வீராங்கனைகளை அடையாளம் கண்டு அவர்கள் போதிய பயிற்சி பெறுவதற்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் உதவி வருகிறது.

புதுடெல்லி, 

இந்த ஒலிம்பிக் திட்டத்தில் டோக்கியோ ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்றுள்ள மல்யுத்த வீராங்கனைகள் சோனம் மாலிக், அன்ஷூ மாலிக் மற்றும் ஒலிம்பிக்கில் பங்கேற்கப்போகும் முதல் இந்திய பாய்மரபடகு வீராங்கனை என்ற பெருமையை பெற்ற சென்னையைச் சேர்ந்த நேத்ரா குமணன், ஒலிம்பிக் வாய்ப்பை உறுதி செய்துள்ள பாய்மர படகு வீரர்கள் விஷ்ணு சரவணன், கணபதி, வருண் தக்கார் ஆகியோரையும் மத்திய விளையாட்டு அமைச்சகம் நேற்று சேர்த்துள்ளது.


Next Story