ஒலிம்பிக் கிராமம் திறப்பு- வீரர்களை வரவேற்க தயாரானது


ஒலிம்பிக் கிராமம் திறப்பு- வீரர்களை வரவேற்க தயாரானது
x
தினத்தந்தி 13 July 2021 11:49 AM GMT (Updated: 13 July 2021 11:49 AM GMT)

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி வரும் 23 ஆம் தேதி தொடங்க உள்ளது.

 டோக்கியோ,

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி வரும் 23  ஆம் தேதி தொடங்க உள்ளது.  ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது.   ஒலிம்பிக் போட்டிகள் காரணமாக அங்கு அனைத்து வசதிகளுடன் கூடிய ஒலிம்பிக் கிராமம் உருவாக்கப்பட்டிருக்கிறது.  போட்டித்தொடர் விரைவில் தொடங்க உள்ள நிலையில், ஒலிம்பிக் கிராமம் பெரிய பாதுகாப்பு வசதிகளுடன் இன்று திறக்கப்பட்டிருக்கிறது.

205 நாடுகளைச் சேர்ந்த 11000 -விளையாட்டு வீரர்கள் போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள் . இதனால் ஒலிம்பிக் கிராமத்தை விட்டு வெளியே செல்லும் சூழல் வந்தாலும் அவர்கள் தினமும் பரிசோதனை செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஒலிம்பிக் கிராமத்தில் குடியிருப்பவர்களில் 80 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஒலிம்பிக் குழு தெரிவித்திருக்கிறது.


Next Story