ஒலிம்பிக் தன்னார்வ குழுவை சேர்ந்த ஒருவர் கொரோனாவால் பாதிப்பு
ஒலிம்பிக் தன்னார்வ குழுவை சேர்ந்த ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதை போட்டி அமைப்பு குழு அறிவித்துள்ளது.
டோக்கியோ,
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நாளை மறுநாள் தொடங்க இருக்கும் நிலையில் கடும் கட்டுப்பாடுகளையும் மீறி அங்கு கொரோனா பரவல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. ஒலிம்பிக் போட்டிக்கான ஆயத்த பணிகளை கவனிக்கும் தன்னார்வ தொண்டர்கள் குழுவை சேர்ந்த ஒருவர் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதை போட்டி அமைப்பு குழு அறிவித்துள்ளது.
போட்டிக்காக பணியாற்றும் தன்னார்வ குழுவை சேர்ந்த ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இருப்பது இதுவே முதல்முறையாகும். அத்துடன் போட்டி தொடர்பான பணிகளில் ஈடுபட்டு இருந்த ஒப்பந்த தொழிலாளர்கள் 7 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதித்த ஒலிம்பிக் போட்டி தொடர்புடையவர்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்து இருக்கிறது.
Related Tags :
Next Story