ஒலிம்பிக்: ஆண்கள் துப்பாக்கிச்சுடுதல் தகுதிச்சுற்று போட்டியில் இந்திய வீரர்கள் தோல்வி


ஒலிம்பிக்: ஆண்கள் துப்பாக்கிச்சுடுதல் தகுதிச்சுற்று போட்டியில் இந்திய வீரர்கள் தோல்வி
x
தினத்தந்தி 25 July 2021 7:32 AM GMT (Updated: 25 July 2021 7:32 AM GMT)

ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்திய வீரர்கள் தோல்வியடைந்தனர்.

டோக்கியோ,

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச்சுடுதல் போட்டியின் தகுதிச்சுற்று நடைபெற்றது. இதில் இந்திய வீரர்கள் தீபக்குமார், திவ்யான்ஷ் சிங்
பன்வார் பங்கேற்றனர்.  

இப்போட்டியில் முதல் 8 இடங்களை கைப்பற்றும் விரர்கள் இறுதி சுற்றுக்கு தகுதி பெறுவர். 6 சுற்றுகளை கொண்ட தகுதி சுற்று போட்டியில் இந்திய வீரர் தீபக் குமார் முறையே 102.9, 103.8, 103.7, 105.2, 103.8, 105.3 என மொத்தம் 624.7 புள்ளிகளை பெற்றார். இதனால், அவர் தரவரிசையில் 26-வது இடத்தை பெற்று இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை தவறவிட்டார்.

அதேபோல், மற்றொரு இந்திய வீரராக திவ்யான்ஷ் சிங் பன்வார் முறையே 102.7, 103.7, 103.6, 104.6,104.6, 103.6 என மொத்தம் 622.8 புள்ளிகளை பெற்றார். இதனால், தரவரிசையில் 32-வது இடத்தை பெற்று அவரும் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார்.

Next Story