செங்கல்பட்டு மாவட்ட கைப்பந்து போட்டி 3 நாள் நடக்கிறது


செங்கல்பட்டு மாவட்ட கைப்பந்து போட்டி 3 நாள் நடக்கிறது
x
தினத்தந்தி 13 Aug 2021 2:17 AM GMT (Updated: 13 Aug 2021 2:17 AM GMT)

செங்கல்பட்டு மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் சாம்பியன்ஷிப் போட்டி 3 நாள் நடக்கிறது.

சென்னை,

செங்கல்பட்ட மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் சாய்ராம் நிறுவனம் ஆதரவுடன் மாவட்ட கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வளாகத்தில் வருகிற 27-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடக்கிறது. இதன் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிகளுக்கு கோப்பையுடன் மொத்தம் ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசும், பங்கேற்கும் அனைத்து அணிகளுக்கு கைப்பந்தும் வழங்கப்படுகிறது. இதில் கலந்து கொள்ள விரும்பும் அணிகள் cvbassn@gmail.com என்ற இ-மெயில் முகவரி மூலம் தங்களது பெயர்களை பதிவு செய்யலாம் என்று செங்கல்பட்டு மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் எம்.அழகேசன், செயலாளர் ஏ.மகேந்திரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Next Story