உலக வில்வித்தை: 3 இந்தியர்கள் கால்இறுதிக்கு தகுதி


உலக வில்வித்தை: 3 இந்தியர்கள் கால்இறுதிக்கு தகுதி
x
தினத்தந்தி 24 Sep 2021 11:01 PM GMT (Updated: 24 Sep 2021 11:01 PM GMT)

உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.

இதில் ‘ரீகர்வ்’ பெண்கள் தனிநபர் பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை அங்கிதா பகத் 6-4 என்ற புள்ளி கணக்கில் தென்கொரியாவின் காங் சாய் யங்கை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். ‘காம்பவுண்ட்’ ஆண்கள் தனிநபர் பிரிவில் இந்திய வீரர் அபிஷேக் வர்மா 145-142 என்ற புள்ளி கணக்கில் சுலோவக்கியாவின் ஜோசப் போசான்ஸ்கியை சாய்த்து கால்இறுதிக்குள் நுழைந்தார். இதன் பெண்கள் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா 146-142 என்ற புள்ளி கணக்கில் தென்கொரியாவின் சாவோன் சோவை தோற்கடித்து கால்இறுதியை எட்டினார்.

Next Story