தாமஸ் கோப்பை : சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.1 கோடி பரிசுத்தொகை அறிவிப்பு..!!


Image Courtesy : Twitter @BAI_Media
x
Image Courtesy : Twitter @BAI_Media
தினத்தந்தி 15 May 2022 11:08 AM GMT (Updated: 15 May 2022 11:08 AM GMT)

இந்திய அணிக்கு ரூ.1 கோடி பரிசு தொகையை மத்திய அரசு அறிவித்துள்ளது.

பாங்காக்,

தாய்லாந்தில் இன்று நடைபெற்ற தாமஸ் கோப்பை பேட்மிண்டன் இறுதி போட்டியில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வலுவான இந்தோனேசிய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

73 ஆண்டுகால வரலாற்றில் இந்திய அணி தாமஸ் கோப்பை  பேட்மிண்டன் பட்டத்தை வெல்வது இதுவே முதல் முறையாகும். 14 முறை சாம்பியன் ஆன இந்தோனேசிய அணியை வீழ்த்தி இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது.

இந்த வரலாற்று வெற்றியை பதிவு செய்த இந்திய அணிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி இந்திய அணிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி தாமஸ் கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.1 கோடி பரிசு தொகையை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த தகவலை மத்திய விளையாட்டு துறை மந்திரி அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அனுராக் தாக்குர் தாமஸ் கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ. 1 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

Next Story