கொரியா மாஸ்டர்ஸ் டென்னிஸ்: முதல் சுற்றில் ஸ்ரீகாந்த் வெற்றி


கொரியா மாஸ்டர்ஸ் டென்னிஸ்: முதல் சுற்றில் ஸ்ரீகாந்த் வெற்றி
x
தினத்தந்தி 20 Nov 2019 11:00 PM GMT (Updated: 20 Nov 2019 11:00 PM GMT)

கொரியா மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் ஸ்ரீகாந்த் வெற்றிபெற்றார்.

குவாங்ஜூ,

கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி குவாங்ஜூ நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 11-வது இடத்தில் உள்ள இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-18, 21-17 என்ற நேர்செட்டில் ஹாங்காங் வீரர் வோங் விங் கி வின்சென்டை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சமீர் வர்மா, ஜப்பான் வீரர் கசுமசா சகாயை சந்தித்தார். இதில் சமீர் வர்மா 11-8 என்ற கணக்கில் முன்னணியில் இருந்த போது கசுமசா சகாய் காயம் காரணமாக விலகினார். இதனால் சமீர் வர்மா வெற்றி பெற்று 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். இன்னொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சவுரப் வர்மா 21-13, 12-21, 13-21 என்ற செட் கணக்கில் கொரியாவின் கிம் டோன்குனிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.


Next Story