உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப்; இறுதி போட்டிக்கு ஆண்டி முர்ரே முன்னேற்றம்
உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் அரையிறுதியில் ரபேல் நடாலை வீழ்த்தி இறுதி போட்டிக்கு ஆண்டி முர்ரே முன்னேறி உள்ளார்.
அபுதாபி,
உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் அபுதாபியில் நடந்து வருகின்றன. இதில் உலக தரவரிசையில் முன்னாள் நம்பர் ஒன் வீரர்களாக திகழ்ந்த, இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஆண்டி முர்ரே மற்றும் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரபேல் நடால் ஆகியோர் விளையாடினர்.
இந்த போட்டியில், முதல் செட்டை முர்ரே எளிதில் (6-3) கைப்பற்றினார். எனினும், அடுத்த சுற்றை கைப்பற்ற அவர் போராட வேண்டி இருந்தது. இறுதியில், 7-5 என்ற புள்ளி கணக்கில் 2வது செட்டையும் முர்ரே வென்றார். இதனால், அரையிறுதியில் வெற்றி பெற்றுள்ள அவர், உலக தரவரிசையில் 5வது இடத்தில் உள்ள ஆண்டிரே ரூப்லெவ் உடன் இறுதி போட்டியில் விளையாட உள்ளார்.
Related Tags :
Next Story