அனுஷ்கா சர்மாவுடன் நிச்சயதார்த்தம்? விராட் கோலி டுவிட்டரில் புதிய தகவல்


அனுஷ்கா சர்மாவுடன் நிச்சயதார்த்தம்? விராட் கோலி டுவிட்டரில் புதிய தகவல்
x
தினத்தந்தி 30 Dec 2016 6:15 AM GMT (Updated: 30 Dec 2016 6:15 AM GMT)

விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா நிச்சயதார்த்தம் ஒன்றாம் தேதி நடைபெற உள்ளதாகவும், உத்தரகாண்ட் மாநிலம் நரேந்திர நகரில் உள்ள ஆனந்தா ஓட்டலில் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியது.


டேராடூன், 

அனுஷ்கா சர்மாவுடன் நிச்சயதார்த்தம் என்று வெளியாகிய செய்தியை கிரிக்கெட் வீரர் விராட் கோலி மறுத்து உள்ளார். 

விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் நீண்ட நாட்களாக காதலித்து வருகிறார்கள். இடையில் சிறு மனஸ்தாபம் ஏற்பட்டாலும் அவர்கள் மீண்டும் காதலர்களாகியது சினிமா மற்றும் கிரிக்கெட் ரசிகர்களையும் குஷிப்படுத்தியது என்றே சொல்லலாம். விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தேவையில்லாத கவனத்தை தவிர்ப்பதற்காக அவர்கள் தங்களுடைய உறவு தொடர்பாக எதுவும் வெளிப்படையாக பேசுவது கிடையாது. இப்போது, அவர்கள் தொடர்பாக புதிய யூகங்கள் கிளம்பி உள்ளது. 

விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் புது வருடத்தில் மோதிரம் மாற்றிக் கொள்ள உள்ளார்கள் என தகவல்கள் வெளியாகியது. அவர்களின் நிச்சயதார்த்தம் ஒன்றாம் தேதி நடைபெற உள்ளதாகவும், உத்தரகாண்ட் மாநிலம் நரேந்திர நகரில் உள்ள ஆனந்தா ஓட்டலில் இந்நிகழ்ச்சியானது நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இப்போது அவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராமில் மலை பிரதேசத்தில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து உள்ளனர். 

நிச்சயதார்த்தம் என்று செய்திகள் வெளியாகி உள்ளநிலையில் டுவிட்டரில் விராட் கோலி அதனை மறுத்து உள்ளார். 

“நாங்கள் நிச்சயதார்த்தம் செய்துக்கொள்ளவில்லை. நாங்கள் நிச்சயதார்த்தம் செய்துக் கொள்ள சென்று இருந்தால் அதனை மறைக்க மாட்டோம்.” என்று கூறிஉள்ளார். 

அடுத்த பதிவில் “செய்தி சேனல்கள் போலியான வதந்திகள் பரப்புவதை எதிர்க்க முடியாது குழப்பம் அடைந்துஉள்ள நிலையில், நாங்கள் குழப்பத்தை முடிவுக்கு கொண்டு வந்து உள்ளோம்,” என்று குறிப்பிட்டு உள்ளார் விராட் கோலி.

இதற்கிடையே டேராடூனில் உள்ள அனுஷ்கா சர்மாவின் 82 வயது பாட்டி ஊர்மிளா சர்மிளா பேசுகையில், “அவர்கள் நிச்சயதார்த்தம் செய்துக் கொள்ளப்போவதாக தகவல் எதுவும் எனக்கு தெரியாது. விராட் கோலியை அவளுக்கு பிடிக்கும், இருவரும் திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். அனுஷ்கா, அவளுடைய தாத்தா இறந்த போது 5 வருடங்களுக்கு முன்னர் இங்கு வந்தாள். ஆனால் நான் அவ்வபோது மும்பை செல்வேன், அவளிடம் போனில் பேசுவேன். நிச்சயதார்த்தம் தொடர்பாக அனுஷ்காவின் தந்தையிடம் இருந்து எனக்கு எந்தஒரு தகவலும் தெரியவரவில்லை,” என்று கூறிஉள்ளார். 

Next Story