பஞ்சாப் நிதி மந்திரி கொரோனா தொற்றால் பாதிப்பு
பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்களில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.
சண்டிகர்,
பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்களில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இந்த நிலையில்,
பஞ்சாப் மாநில நிதி மந்திரி மன்பிரீத் சிங் பாதலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது.
இத்தகவலை டுவிட்டரில் வெளியிட்டிருக்கிற மன்பிரீத் சிங், சமீப நாட்களில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார்.
கடந்த 8-ந்தேதி மாநில சட்டசபையில் பட்ஜெட்டை மன்பிரீத் சிங் தாக்கல் செய்தார். பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன் கொரோனா பரிசோதனையில் எனக்கு தொற்று இல்லை என்று வந்தது. ஆனால் கூட்டத்தொடருக்குப் பின் கொரோனா பாதிப்பு உறுதியாகியிருக்கிறது என்று முகநூல் பதிவில் மன்பிரீத்சிங் பாதல் தெரிவித்திருக்கிறார்
Related Tags :
Next Story