பிரபல தயாரிப்பாளர் மகன் என்னை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் நடிகை ஸ்ரீரெட்டி


பிரபல தயாரிப்பாளர் மகன் என்னை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் நடிகை ஸ்ரீரெட்டி
x
தினத்தந்தி 10 April 2018 8:06 AM GMT (Updated: 10 April 2018 8:06 AM GMT)

பிரபல தயாரிப்பாளர் ஒருவரின் மகன் என்னை கட்டாயப்படுத்தி தன்னுடன் உறவு வைத்துக் கொண்டார். அந்த போட்டோவை விரைவில் வெளியிடுவேன் என நடிகை ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார். #SriReddy #SriLeaks

ஐதராபாத்

தெலுங்கு திரையுலகில் கடந்த சில வாரங்களாக ஸ்ரீ ரெட்டி பெரும் அதிர்ச்சி அலையை உருவாக்கியுள்ளார். அதில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் தற்போது தான் அதிகமாக உள்ளது என்றும் தனக்கு மூவி ஆர்டிஸ்ட் அசோசியேஷன் உறுப்பினருக்கான அடையாள அட்டை வழங்கவில்லை என்று கூறி நடுரோட்டில் அரை நிர்வாண போராட்டம் நடத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதனையடுத்து அங்கு வந்த போலீசார் அவரை சமாதானப்படுத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்னணி செய்தி தொலைக்காட்சியில் பேட்டியளித்த நடிகை ஸ்ரீ ரெட்டி ஒரு அதிர்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார். அதில் ஸ்டூடியோவுக்கு அழைத்துச் சென்று பிரபல தயாரிப்பாளர் ஒருவரின் மகன் என்னை கட்டாயப்படுத்தி உறவு வைத்துக் கொண்டார். தெலுங்கு திரையுலகை ஆளும் தயாரிப்பாளர் அவர் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த தயாரிப்பாளரின் மகன் என்னை பயன்படுத்திக் கொண்டார். அவர் என்னை யூஸ் பண்ணிய ஸ்டூடியோ அரசுக்கு சொந்தமானது. அந்த நபரின் பெயரை விரைவில் வெளியிடுவேன் என்கிறார் ஸ்ரீ ரெட்டி. என்னை ஸ்டூடியோவுக்கு அழைத்துச் சென்ற தயாரிப்பாளரின் மகனின் லீலை புகைப்படத்தை விரைவில் வெளியிடுவேன். அது தான் என் பிரம்மாஸ்திரம் என்று ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய ஸ்ரீ ரெட்டி தயாரிப்பாளரின் மகன் அழைத்ததால் ஸ்டூடியோவுக்கு சென்றேன். நான் பேசுவதற்காக மட்டுமே ஸ்டூடியோவுக்கு சென்றேன். ஆனால் செக்ஸ் விளையாட்டில் நான் ஈடுபடவில்லை என்று ஸ்ரீ ரெட்டி கூறியுள்ளார்.

Next Story