முககவசம் அணியாததால் சர்ச்சையில் விஜய் சேதுபதி
கொரோனா 2-வது அலை தீவிரமாகி உள்ளதால் அனைவரும் கட்டாயம் முககவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் தியேட்டர்களில் ஒரு இருக்கை விட்டு இருக்கை பார்வையாளர்களை அமர வைக்கவும் அரசு அறிவுறுத்தி உள்ளது.
முககவசம் அணியாதவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா விதிமுறைகளை விஜய்சேதுபதி மீறி விட்டதாக விமர்சனங்கள் கிளம்பி உள்ளன. தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத்தின் சிறப்பு காட்சி நடிகர் நடிகைகள், இயக்குனர்கள் உள்ளிட்ட திரையுலகினருக்காக சென்னையில் உள்ள தியேட்டரில் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. இந்த படத்தை பார்த்து விட்டு வெளியே வந்த விஜய்சேதுபதி படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் கையை பிடித்தபடி படம் நன்றாக இருப்பதாக பாராட்டினார். அவரை கட்டிப்பிடித்து கைகளை முத்தமிடவும் செய்தார். அப்போது விஜய்சேதுபதி முககவசம் அணிந்திருக்கவில்லை. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. விஜய்சேதுபதி முககவசம் அணியாமல், சமூக விலகலை கடைபிடிக்காமல் மாரி செல்வராஜை கட்டிப்பிடித்து முத்தமிட்டு கொரோனா விதிமுறைகளை மீறி இருக்கிறார். விஜய்சேதுபதியே இப்படி செய்யலாமா? உங்களை பார்த்து ரசிகர்களும் இப்படித்தானே செய்வார்கள் என்று கண்டித்தும், விமர்சித்தும் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். இந்த பிரச்சினை வலைத்தளத்தில் பரபரப்பாகி உள்ளது.
Related Tags :
Next Story