“சிரிக்கவைத்த கலைஞன் அழவைத்துவிட்டுப் போய்விட்டானே! - வைரமுத்து உருக்கம்


“சிரிக்கவைத்த கலைஞன் அழவைத்துவிட்டுப் போய்விட்டானே! -  வைரமுத்து உருக்கம்
x
தினத்தந்தி 17 April 2021 3:21 AM GMT (Updated: 17 April 2021 3:21 AM GMT)

“அய்யோ! சிரிப்பு செத்துவிட்டதே! எல்லாரையும் சிரிக்கவைத்த கலைஞன் அழவைத்துவிட்டுப் போய்விட்டானே விவேக் மறைவிற்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்,


சென்னை,

பிரபல நடிகர் விவேக் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக நேற்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு நடிகர் விவேக்கின் உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தநிலையில் அவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விவேக் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு அவரது மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என்று திரைபிரபலங்கள் பலரும் இரங்கல் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பதிவில்,

 “அய்யோ! சிரிப்பு செத்துவிட்டதே!
எல்லாரையும் சிரிக்கவைத்த கலைஞன்
அழவைத்துவிட்டுப் போய்விட்டானே!

திரையில் இனி பகுத்தறிவுக்குப்
பஞ்சம் வந்துவிடுமே!

மனிதர்கள் மட்டுமல்ல விவேக்!
நீ நட்ட மரங்களும் உனக்காக
துக்கம் அனுசரிக்கின்றன.

கலைச் சரித்திரம் சொல்லும் :
நீ 'காமெடி'க் கதாநாயகன்” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

அய்யோ! சிரிப்பு செத்துவிட்டதே!
எல்லாரையும் சிரிக்கவைத்த கலைஞன்
அழவைத்துவிட்டுப் போய்விட்டானே!

திரையில் இனி பகுத்தறிவுக்குப்
பஞ்சம் வந்துவிடுமே!

மனிதர்கள் மட்டுமல்ல விவேக்!
நீ நட்ட மரங்களும் உனக்காக
துக்கம் அனுசரிக்கின்றன.

கலைச் சரித்திரம் சொல்லும் :
நீ 'காமெடி'க் கதாநாயகன்.

என பதிவிட்டுள்ளார்.

Next Story