ஞானராஜசேகரன் இயக்கிய படம் ஐந்து உணர்வுகள்
மோகமுள், பாரதி, பெரியார், ராமானுஜன் ஆகிய மாநில மற்றும் தேசிய விருதுகளை வென்ற படங்களை டைரக்டு செய்தவர், ஞானராஜசேகரன். முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர், ‘ஐந்து உணர்வுகள்’ என்ற பெயரில், ஒரு புதிய படத்தை டைரக்டு செய்து இருக்கிறார். இதுபற்றி அவர் சொல்கிறார்:-
‘‘மறைந்த எழுத்தாளர் ஆர்.சூடாமணி எழுதிய ஐந்து கதை களின் திரை வடிவம்தான், ‘ஐந்து உணர்வுகள்.’ ஆண், பெண் உறவை மனோதத்துவ ரீதியில் சித்தரிப்பதுடன், எல்லோரும் ரசிக்கும் வண்ணம் சுவாரசியமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இதில் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். சுஜிதா, ஸ்ரேயா அஞ்சன், ஸ்ரீரஞ்சனி, சத்யப்ரியா, சாந்தி வில்லியம்ஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்து இருக்கிறார்.
இரண்டின் இடையில், அம்மா பிடிவாதக்காரி, பதில் பிறகு வரும், தனிமைத்தளிர், களங்கம் இல்லை ஆகிய 5 கதைகள், இதில் இடம்பெறுகின்றன. படம் தியேட்டர்களில் வெளியாகும்.’’
Related Tags :
Next Story