நடிகை ராஷ்மிகா மந்தனா பயணித்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு - அவசரமாக தரையிறக்கம்
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் புறப்பட்ட 30 நிமிடங்களில் மீண்டும் மும்பைக்கு திரும்பியுள்ளது.
சென்னை,
நடிகை ராஷ்மிகா மந்தனா மும்பையில் இருந்து விமானம் மூலம் ஐதராபாத் சென்று கொண்டிருந்தார். அவருடன் நடிகை ஷ்ரத்தா தாஸ் பயணம் செய்தார். இந்நிலையில் அவர் சென்றுகொண்டிருந்த விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்த விமானம் அவசர அவசரமாக தரையிறங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. விமானம் புறப்பட்ட 30 நிமிடங்களில் மீண்டும் மும்பை விமான நிலையத்திற்கு திரும்பியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ராஷ்மிகா மந்தனா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'இன்று நாங்கள் மரணத்தில் இருந்து தப்பித்தோம்' என்று பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story