சென்னை ஐகோர்ட்டில் நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கு முடித்து வைப்பு


சென்னை ஐகோர்ட்டில் நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கு முடித்து வைப்பு
x

சிவகார்த்திகேயனிடம் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.12.60 லட்சம் ரூபாயை திருப்பி செலுத்திவிட்டதாக வருமான வரித்துறை தெரிவித்தது.

சென்னை,

'மிஸ்டர் லோக்கல்' படத்திற்காக பெற்ற சம்பளத்திற்கான டி.டி.எஸ். தொகை கட்டப்படாததால், தனது வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை வருமான வரித்துறையினர் பிடித்தம் செய்ததாகவும், அதனை திருப்பி வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரி நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது வருமான வரித்துறை தரப்பில் அளிக்கப்பட்ட பதில் மனுவில், நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இடையே சுமூகமான முடிவு எட்டப்பட்டதைத் தொடர்ந்து டி.டி.எஸ். தொகை கட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் சிவகார்த்திகேயனிடம் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.12.60 லட்சம் ரூபாயை திருப்பி செலுத்திவிட்டதாகவும் பதிலளிக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி, நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.




Next Story