டைரக்டரான நயன்தாரா..? வெளியான புதிய புகைப்படத்தால் ரசிகர்கள் குழப்பம்


டைரக்டரான நயன்தாரா..?  வெளியான புதிய புகைப்படத்தால் ரசிகர்கள் குழப்பம்
x

நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேமராவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

சென்னை,

தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறக்கும் நயன்தாரா அதிக சம்பளம் பெறும் தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். சமீபத்தில் ஷாருக்கான் ஜோடியாக நடித்த 'ஜவான்' படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அறிமுகமான முதல் இந்தி படத்திலேயே நயன்தாரா பெரிய அளவில் பேசப்பட்டு விட்டார்.

இவர் தற்போது இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு 'அன்னபூரணி' என்று பெயரிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் தயாராகியுள்ள இந்த படத்தில் நடிகர் ஜெய் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படம் வருகிற டிசம்பர் 1-ம் தேதி வெளியாக உள்ளது.

இதனைத் தொடர்ந்து நயன்தாரா இயக்குனர் டியூட் விக்கி இயக்கும் `மண்ணாங்கட்டி சின்ஸ் 1960' என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேமராவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் நயன்தாரா புதிய படத்தை இயக்குகிறாரா..? இயக்குனராக மாறி விட்டாரா..? என்றெல்லாம் கேள்விகளை எலுப்பி வந்தனர்.

இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் அந்த புகைப்படத்தை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்து உள்ளது. அதில் `மண்ணாங்கட்டி சின்ஸ் 1960 படப்பிடிப்பில் நயன்தாரா இணைந்துள்ளார்' என்று தெரிவித்துள்ளது. இதன்மூலம் ரசிகர்களின் குழப்பம் தீர்ந்துள்ளது.


Next Story