'டிமான்ட்டி காலனி 2' படத்தின் படப்பிடிப்பு நிறைவு


டிமான்ட்டி காலனி 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவு
x

அருள்நிதி நடித்துள்ள 'டிமான்ட்டி காலனி 2' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

சென்னை,

2015-ம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான 'டிமான்ட்டி காலனி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து 7-ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது. இதில், அருள்நிதி கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.

சாம் சி.எஸ். இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், 'டிமான்ட்டி காலனி -2' படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. இதனை இயக்குனர் அஜய் ஞானமுத்து தன்னுடைய சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்துள்ளார்.



Next Story