'நானும் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகி உள்ளேன்'...இப்போது நினைத்தாலும் - நடிகை பேட்டி


நானும் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகி உள்ளேன்...இப்போது நினைத்தாலும் - நடிகை பேட்டி
x

தானும் பாலியல் சீண்டலுக்கு உள்ளானதாக கேரள நடிகை தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

நடிகைகள் பாலியல் தொல்லை அனுபவங்களை தொடர்ந்து வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்கள். இந்த வரிசையில் தற்போது மலையாள இளம் நடிகை சுருதி ரஜினிகாந்தும் இணைந்துள்ளார்.

இவர் குஞ்சல்தோ, பத்மா, நீரஜா, குயீன் எலிசபெத் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். வெப் தொடர் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார்.

தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து சுருதி ரஜினிகாந்த் அளித்துள்ள பேட்டியில், ''குழந்தை பருவத்தில் நான் பாலியல் சீண்டலுக்கு உள்ளானேன். அது எனது வாழ்க்கையில் இருள் நிறைந்த கால கட்டம்.

எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் எனது உறவினர் என்பதால் வீட்டில் தெரிவிக்கவில்லை. குழந்தைகள் இதுபோன்ற பாலியல் தொல்லைகளை எதிர்கொள்ளும்போது தைரியமாக எதிர்க்க வேண்டும்.

எனக்கு பாலியல் தொல்லை கொடுத்த அந்த உறவினருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் என்னிடம் மன்னிப்பு கேட்டு குறுந்தகவல் அனுப்பினார். இப்போது நினைத்தாலும் சொந்தங்கள் மத்தியில் அவரது முகத்திரையை என்னால் கிழிக்க முடியும். அந்த பயம் அவருக்கும் இருக்கிறது'' என்றார்.


Next Story