'ஜிகர்தண்டா-2' படத்தின் மூன்றாவது பாடல் வெளியானது..!


ஜிகர்தண்டா-2 படத்தின் மூன்றாவது பாடல் வெளியானது..!
x

'ஜிகர்தண்டா-2' திரைப்படம் வருகிற 10-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சென்னை,

'ஜிகர்தண்டா' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' என பெயரிடப்பட்டுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற 10-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில் இந்த படத்தின் மூன்றாவது பாடலான 'தீக்குச்சி' பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. முத்தமிழ், பூவன் மாதீசன் எழுதியுள்ள இந்த பாடலை சந்தோஷ் நாராயணன் மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



Next Story