அண்ணாமலையாரிடம் தரிசனம் பெற்ற நடிகர் அருண்விஜய்


அண்ணாமலையாரிடம் தரிசனம் பெற்ற நடிகர் அருண்விஜய்
x
தினத்தந்தி 7 Feb 2022 5:50 PM GMT (Updated: 7 Feb 2022 5:50 PM GMT)

இறைவனின் அருளோடு அனைத்து படங்களும் வெற்றி பெற்று தமிழ் திரையுலகம் மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்ப வேண்டும் என வேண்டிக்கொண்டதாக நடிகர் அருண்விஜய் தெரிவித்தார்.

படத்திற்குப் படம் தனது தனித்துவமான நடிப்பாலும் தன்னார்வ தொண்டு செயல்களினாலும் பல ரசிகர்களின் அன்பைப் பெற்றவர் நடிகர் அருண்விஜய்.

தனது நடிப்பில் உருவான ‘சினம்’, ‘அக்னிசிறகுகள்’,‘பார்டர்’, ‘யானை’, ‘ஓ மை டாக்’ படங்கள் திரைக்கு வரத் தயாராகி வருவதைத் தொடர்ந்து திருவண்ணாமலை கோயிலில் அண்ணாமலையாரை தரிசித்தார்.

இறைவனின் அருளோடு அனைத்து படங்களும் வெற்றி பெற்று தமிழ் திரையுலகம் மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்ப வேண்டும் என வேண்டிக்கொண்டதாகப் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.

இதையடுத்து ரசிகர்களுடன் இணைந்து நடிகர் அருண் விஜய் கிரிவலம் மேற்கொண்டார்.

Next Story