லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 29 Jan 2022 4:42 PM GMT (Updated: 29 Jan 2022 4:42 PM GMT)

லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.

கரூர்
கரூர் செங்குந்தபுரம் கேவிபி நகரில் வசித்து வந்தவர் சுப்பிரமணியன் (வயது 57). தனியார் நிறுவன ஊழியரான இவர் நேற்று முன்தினம் திருக்காம்புலியூர் ரவுண்டானா அருகே நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அப்பகுதி வழியாக வந்த லாரி இவர் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த கரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து லாரி டிரைவர் அய்யப்பனை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story