ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: ஐதராபாத் அணிக்கு 156 ரன்கள் இலக்கு


ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: ஐதராபாத் அணிக்கு 156 ரன்கள் இலக்கு
x
தினத்தந்தி 14 April 2019 4:26 PM GMT (Updated: 14 April 2019 4:26 PM GMT)

டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணிக்கு 156 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஐதராபாத், 

ஐதராபாத்தில், டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும்  ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயான 30-வது லீக் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களை எடுத்துள்ளது. டெல்லி அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் அய்யர் 45 (40) ரன்கள், காலின் மன்ரோ 40 (24) ரன்கள் எடுத்தனர்.

ஐதராபாத் அணியில் சிறப்பாக பந்து வீசிய சயத் கலீல் அகமது 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்,  அபிஷேக் சர்மா மற்றும் ரஷீத் கான் 1 விக்கெட் வீழ்த்தினர். 

இதனையடுத்து ஐதராபாத் அணி 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க உள்ளது.

Next Story