ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: ஐதராபாத் அணிக்கு 133 ரன்கள் இலக்கு
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணிக்கு 133 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஐதராபாத்,
ஐதராபாத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயான 33-வது லீக் போட்டி நடைபெற்று வருகிறது.
மேலும் இப்போட்டியில், சென்னை அணியில் டோனி விளையாடாத காரணத்தினால் சுரேஷ் ரெய்னா கேப்டனாக செயல்படுகிறார்.
இதில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்களை எடுத்துள்ளது.
சென்னை அணியில் அதிகபட்சமாக டு பிளிஸ்சிஸ் 45 (31) ரன்கள், ஷேன் வாட்சன் 31 (29) ரன்கள், அம்பத்தி ராயுடு 25 (21) ரன்கள் எடுத்தனர்.
ஐதராபாத் அணியில், ரஷீத் கான் 2 விக்கெட் மற்றும் கலீல் அகமது, நதீம், விஜய் சங்கர் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து ஐதராபாத் அணி 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க உள்ளது.
Related Tags :
Next Story