ஐ.பி.எல் கிரிக்கெட்: போட்டி விதிமுறையில் மாற்றம் ..!


ஐ.பி.எல் கிரிக்கெட்: போட்டி விதிமுறையில் மாற்றம் ..!
x
தினத்தந்தி 15 March 2022 4:38 PM GMT (Updated: 15 March 2022 4:38 PM GMT)

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் 20 ஓவர் போட்டி தொடர் வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது.

மும்பை:

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் வரும் 26ம் தேதி மும்பையில் தொடங்க இருக்கிறது. இதற்கான ஏலம் கடந்த மாதம் பெங்களுருவில் நடந்தது .26ம் தேதி  நடைபெறும்  முதல் போட்டியில் சென்னை -கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

10 அணிகள் பங்கேற்கும் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் சில புதிய விதிமுறைகளை பிசிசிஐ செய்துள்ளது .

நடுவர் முடிவை மறு பரிசீலனை செய்யும் (டி.ஆர்.எஸ்.) வாய்ப்பு ஒவ்வொரு இன்னிங்சிலும் ஒன்றில் இருந்து 2-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

ஒரு பேட்ஸ்மேன் அவுட் ஆகும்போது மறுமுனையில் இருக்கும் பேட்ஸ்மேன் எதிர் பகுதிக்கு சென்று இருந்தாலும், செல்லாமல் இருந்தாலும் புதியதாக களம் இறங்கும் பேட்ஸ்மேன்தான் பந்தை சந்திக்க வேண்டும் என்ற விதி கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும் பிளேஆப் சுற்று மற்றும் இறுதிப்போட்டியில் ஆட்டம் டையில் முடிந்து, சூப்பர் ஓவர் நடத்த முடியவில்லை என்றால் லீக் புள்ளி பட்டியலில் முன்னணியில் உள்ள அணி வெற்றியாளராக அறிவிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story