ஐபிஎல் : ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு


Image Courtesy : IPL
x
Image Courtesy : IPL
தினத்தந்தி 11 May 2022 1:36 PM GMT (Updated: 11 May 2022 1:36 PM GMT)

டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது


மும்பை,

ஐபிஎல் 15வது சீசன் சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று  மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெறும்  போட்டியில் ராஜஸ்தான் - டெல்லி அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது .அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது .

ராஜஸ்தான் அணி 14 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 3-வது இடத்திலும், டெல்லி அணி 10 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் ராஜஸ்தான் அணி 16 புள்ளிகளுடன் பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்ய அதிக வாய்ப்புள்ளது.

 அதே நேரத்தில் இந்த போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றால் இந்த தொடர் மேலும் பரபரப்பான கட்டத்தை நோக்கி செல்லும்.


Next Story