அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் சார்பில் நேற்று காங்கேயம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
காங்கேயம்,
அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு மாதத்தின் முதல் தேதியே சம்பளம் வழங்க வேண்டும். ஊதியக்குழு ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் சார்பில் நேற்று காங்கேயம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க கிளை தலைவர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். திருப்பூர் மத்திய சங்க மண்டல தலைவர் சென்னியப்பன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு சங்க நிர்வாகிகளான அர்ச்சுனன், தங்கவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு மாதத்தின் முதல் தேதியே சம்பளம் வழங்க வேண்டும். ஊதியக்குழு ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் சார்பில் நேற்று காங்கேயம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க கிளை தலைவர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். திருப்பூர் மத்திய சங்க மண்டல தலைவர் சென்னியப்பன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு சங்க நிர்வாகிகளான அர்ச்சுனன், தங்கவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
Next Story