வளசரவாக்கத்தில் வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிப்பு


வளசரவாக்கத்தில் வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிப்பு
x
தினத்தந்தி 19 Aug 2017 10:00 PM GMT (Updated: 19 Aug 2017 7:33 PM GMT)

சென்னை போரூரை அடுத்த காரம்பாக்கத்தில் வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிப்பு.

பூந்தமல்லி,

சென்னை போரூரை அடுத்த காரம்பாக்கம், தர்மராஜா கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது35), டைல்ஸ் கற்கள் பதிக்கும் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு காற்று வரவில்லை என்பதற்காக அவர் வீட்டுக்கதவை திறந்து வைத்து விட்டு தூங்கிக்கொண்டிருந்தார். படுக்கை அறையில் அவரது மனைவி தூங்கிக்கொண்டிருந்தார்.

நள்ளிரவில் அவர்களது வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர் வீட்டினுள் இருந்த 2 செல்போன்கள் மற்றும் படுக்கை அறையில் தூங்கிக்கொண்டிருந்த சுரேசின் மனைவி கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் நகையை பறித்தான்.

அப்போது அலறியபடி அவர் எழுந்து பார்த்தபோது மர்மநபர் வீட்டிலிருந்து தப்பி ஓடினான். அதைத்தொடர்ந்து அவனை பிடிக்க சுரேஷ் பின் தொடர்ந்து சென்றார். ஆனால் அந்த நபர் தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

Next Story