பட்டாபிராம் அருகே முன்னாள் ஊராட்சி தலைவருக்கு வெட்டு


பட்டாபிராம் அருகே முன்னாள் ஊராட்சி தலைவருக்கு வெட்டு
x
தினத்தந்தி 11 Oct 2017 9:30 PM GMT (Updated: 11 Oct 2017 9:12 PM GMT)

பட்டாபிராமை அடுத்த அண்ணம்பேடு அம்மன் கோவில் தெருவை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன் .

ஆவடி,

பட்டாபிராமை அடுத்த அண்ணம்பேடு அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அன்பழகன் (வயது55). முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், இவர் நேற்று மதியம் வீட்டில் இருந்த போது மர்ம நபர்கள் 4 பேர் 2 மோட்டார் சைக்கிளில் வந்தனர். அங்கு தனியாக இருந்த அன்பழகனை மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதுகுறித்து பட்டாபிராம் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Next Story