407 போலீசார் பணியிட மாற்றம்


407 போலீசார் பணியிட மாற்றம்
x
தினத்தந்தி 18 May 2018 11:19 PM GMT (Updated: 18 May 2018 11:19 PM GMT)

ராமநாதபுரம் மாவட்டத்தில் 407 போலீசாரை பணியிட மாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டு உள்ளார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் பணியாற்றி வந்த 22 இன்ஸ்பெக்டர்களை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து சரக போலீஸ் டி.ஐ.ஜி. காமினி உத்தரவிட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணியாற்றி வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், தலைமை காவலர்கள் மற்றும் போலீசார் 407 பேரை அதிரடியாக வேறு இடங்களுக்கு மாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா உத்தரவிட்டுஉள்ளார்.

இதன்படி மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணியாற்றி வந்தவர்களில் 3 ஆண்டுகள் பணி முடித்திருந்த 214 பேர் அங்கிருந்து மாவட்டத்திற்குள் வேறு போலீஸ் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப் பட்டுஉள்ளனர். இதேபோல, பணியிட விருப்ப மாறுதல் கோரி விண்ணப்பித்திருந்த 79 பேரை அவரவர் விருப்பங்களின் அடிப்படையில் நிர்வாக ஆய்வுகளின் அடிப்படையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுஉள்ளனர்.

மாவட்டத்தில் மதுவிலக்கு பிரிவில் பணியாற்றி வந்த 19 பேர் போலீஸ் நிலையங்களுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வந்த காவலர்கள் 95 பேர் காலியாக உள்ள போலீஸ் நிலைய பணிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு மாவட்டத்தில் பணியாற்றி வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், தலைமை காவலர்கள், காவலர்கள் என மொத்தம் 407 பேர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர, தனிபிரிவு காவலர்கள் சிலரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மாற்றம் செய்யப்பட்டுள்ள இடங்களில் உடனடியாக பணியில் சேர உத்தரவிடப்பட்டுஉள்ளது. 

Next Story