ஆவின் நிறுவனத்தில் வேலை


ஆவின் நிறுவனத்தில் வேலை
x
தினத்தந்தி 19 Jun 2018 5:43 AM GMT (Updated: 19 Jun 2018 5:43 AM GMT)

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் கீழ் செயல்படும் ஆவின் நிறுவனத்தில் சென்னை, திருவண்ணாமலை மற்றும் ஈரோடு பகுதியில் அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஜூனியர் எக்சிகியூட்டிவ் ஆபீசர் பணிக்கு மொத்தம் 75 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் சென்னைக்கு 66 இடங்களும், திருவண்ணாமலையில் 6 இடங்களும், ஈரோட்டில் 3 இடங்களும் உள்ளன.

ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். கோஆபரேட்டிவ் டிரெயினிங் பயிற்சி பெற்றிருப்பது அவசியம். பி.ஏ. (கோஆபரேட்டிவ்) பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு பயிற்சியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பதாரர் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பி.சி., எம்.பி.சி., டி.என்சி., எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை.

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விருப்பமுள்ளவர்கள் ரூ.250 கட்டணம் செலுத்தி, குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் மற்றும் கட்டண டி.டி. மற்றும் சான்றுகள் பதிவு தபால் அல்லது விரைவு தபாலில் குறிப்பிட்ட முகவரியை 25-6-2018-ந் தேதிக்குள் சென்றடைய வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை www.aavinmilk.com. என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம். 

Next Story