கடலூரில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு 7 புதிய பஸ்கள் - அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கி வைத்தார்


கடலூரில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு 7 புதிய பஸ்கள் - அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 13 Oct 2018 11:30 PM GMT (Updated: 13 Oct 2018 11:00 PM GMT)

கடலூரில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு 7 புதிய பஸ்களை அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கி வைத்தார்.

கடலூர்,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 10-ந்தேதி சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் கடலூர் மண்டலத்துக்கு 12 புதிய பஸ்களை தொடங்கி வைத்தார்.

இதில் 7 பஸ்களை கடலூர் பஸ் நிலையத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் முன்னிலையில் அமைச்சர் எம்.சி.சம்பத் நேற்று தொடங்கி வைத்தார்.

கடலூரில் இருந்து வடலூர், விருத்தாசலம் வழியாக திருச்சிக்கும், விருத்தாசலத்தில் இருந்து திருச்சி, பெரம்பலூர், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக சென்னைக்கும், திட்டக்குடியில் இருந்து விருத்தாசலம், விழுப்புரம், திண்டிவனம் வழியாக சென்னைக்கும், பண்ருட்டியில் இருந்து உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி வழியாக சேலத்துக்கும், சிதம்பரத்தில் இருந்து கடலூர், புதுச்சேரி, திண்டிவனம் வழியாக சென்னைக்கும்(2 பஸ்கள்), சிதம்பரத்தில் இருந்து புவனகிரி, வடலூர், விருத்தாசலம் வழியாக சேலத்துக்கும் செல்வதற்கு இந்த பஸ்கள் தொடங்கி வைக்கப் பட்டது. இந்த பஸ்கள் மேற்கண்ட 6 வழித்தடங்களில் இயக்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், கடலூர் மண்டல போக்குவரத்துக்கழக பொது மேலாளர் ஜெ.சுந்தரம், கடலூர் நகரசபை முன்னாள் தலைவர் குமரன், நகரசபை முன்னாள் துணை தலைவர் சேவல்குமார், முன்னாள் கவுன்சிலர் தமிழ்செல்வன் போக்குவரத்து கழக துணை மேலாளர்கள் குணசேகரன், செந்தில், உதவி மேலாளர்கள் கே.சுந்தரம், முருகானந்தம், கிளை மேலாளர் சுந்தர்ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Next Story