நாகை அருகே சரக்கு ஆட்டோ-மோட்டார் சைக்கிள் மோதல்; 2 பேர் பலி யார் அவர்கள்? போலீசார் விசாரணை


நாகை அருகே சரக்கு ஆட்டோ-மோட்டார் சைக்கிள் மோதல்; 2 பேர் பலி யார் அவர்கள்? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 26 Nov 2018 11:00 PM GMT (Updated: 26 Nov 2018 7:16 PM GMT)

நாகை அருகே சரக்கு ஆட்டோ-மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் பலியானார்கள். இவர்கள் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகூர்,

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து நாகையை நோக்கி சரக்கு ஆட்டோ ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே நாகையில் இருந்து வேளாங்கண்ணியை நோக்கி ஒரு மோட்டார் சைக்கிளில் 40 வயது மதிக்கத்தக்க 2 பேர் வந்து கொண்டிருந்தனர். நாகை அருகே பாப்பாக்கோவில் சென்ற போது சரக்கு ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நாகை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தில் பலியான 2 பேர் யார்? அவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சரக்கு ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்து தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

Next Story