வேளாங்கண்ணி அருகே கல்லால் அடித்து பெண் கொலை கணவருக்கு வலைவீச்சு


வேளாங்கண்ணி அருகே கல்லால் அடித்து பெண் கொலை கணவருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 30 Dec 2018 10:15 PM GMT (Updated: 30 Dec 2018 6:58 PM GMT)

வேளாங்கண்ணி அருகே பெண்ணை கல்லால் அடித்துக்கொலை செய்த அவரது கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வேளாங்கண்ணி,

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே எட்டுக்குடி பகுதியை சேர்ந்தவர் ரவி. விவசாயி. இவருடைய மனைவி சித்ரா (வயது 45). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். சம்பவத்தன்று ரவிக்கும், மனைவி சித்ராவிற்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதில் இருவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த ரவி, அருகில் கிடந்த கருங்கல்லை எடுத்து சித்ராவை தலையில் தாக்கினார். இதனால் படுகாயம் இடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப் பட்டது.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சித்ரா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருக்குவளை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ரவியை வலைவீசி தேடி வருகின்றனர். வேளாங்கண்ணி அருகே குடும்பத்தகராறில் மனைவியை கல்லால் கணவன் அடித்துக்கொலை செய்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story