திருவாரூர்-காரைக்குடி அகல ரெயில்பாதை பணிகள் மார்ச் மாதத்துக்குள் முடிவடையும்


திருவாரூர்-காரைக்குடி அகல ரெயில்பாதை பணிகள் மார்ச் மாதத்துக்குள் முடிவடையும்
x
தினத்தந்தி 11 Feb 2019 11:00 PM GMT (Updated: 11 Feb 2019 6:57 PM GMT)

திருவாரூர்-காரைக்குடி இடையே அகல ரெயில் பாதை பணிகள் வருகிற மார்ச் மாதத்துக்குள் முடிவடையும் என தென்னகரெயில்வே பொதுமேலாளர்் குல்ஸ்ரஷ்தா கூறினார்.

திருவாரூர், 

திருவாரூர் ரெயில் நிலையத்தில் காரைக்கால் துறைமுகத்தில் இருந்து நவீன முறையில் நிலக்கரி ஏற்றி புறப்பட்ட 150-வது சரக்கு ரெயிலை தென்னக ரெயில்வே பொது மேலாளர்் குல்ஸ்ரஷ்தா கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

காரைக்கால் துறைமுகத்தில் இருந்து நிலக்கரி ஏற்றி செல்லும் 150-வது சரக்கு ரெயிலை கொடியசைத்து பயணத்தை தொடங்கி வைத்திருப்பது ரெயில்வே துறைக்கும், காரைக்கால் துறைமுகத்திற்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. இனி வரும் காலங்களில் அதிக அளவில்

நிலக்கரி சரக்கு ரெயில் மூலமாக கொண்டு செல்லப் படும்.

திருவாரூர்-காரைக்குடி இடையே அகல ரெயில் பாதை பணிகள் வருகிற மார்்ச் மாதத்துக்குள் முடிவடையும். திருச்சி-காரைக்கால், விழுப்புரம்-கடலூர்் மின்மயமாக்கும் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும். திருவாரூரில் இருந்து திருச்சிக்கு பயணிகளின் எண்ணிக்கையை கொண்டு புதிய ரெயில்கள் இயக்குவதற்கு முடிவு செய்யப்படும். மன்னை-கோவை செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயில் திருவாரூர் வரை நீட்டிப்பு செய்வது பரீசிலிக்கப்படும்.

ரெயில் நீட்டிப்பு, புதிய ரெயில் குறித்து எம்.பி.க்கள் வைக்கும் கோரிக்கைகளை கொண்டு முடிவு எடுப்பது ரெயில்வே துறை வாரியத்தின் கையில் தான் உள்ளது. பேரளம்-காரைக்கால் ரெயில் பாதை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது காரைக்கால் துறைமுகத்தின் தலைமை செயல் அதிகாரி முரளிதரன், திருச்சி மண்டல ரெயில்வே துணை மேலாளர் உதயகுமார் ரெட்டி உள்பட பலர் உடனிருந்தனர். 

Next Story