முன்னாள் விளையாட்டு வீரர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்


முன்னாள் விளையாட்டு வீரர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 17 Feb 2019 10:30 PM GMT (Updated: 17 Feb 2019 7:45 PM GMT)

முன்னாள் விளையாட்டு வீரர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சாந்தா கூறினார்.

பெரம்பலூர்,

விளையாட்டுத் துறையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு 2018-19-ம் ஆண்டிற்கு ஓய்வூதிய உதவித் தொகையாக மாதம் ரூ.3 ஆயிரம் வீதம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை ஆணையத்தின் இணையதளம் www.sdat.tn.gov.in மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேற்படி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க விரும்புவோர் குறைந்தபட்ச தகுதியாக தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றவராக இருக்கவேண்டும். இந்த போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

மேலும், தகுதியான விளையாட்டுப் போட்டிகளான மத்திய அரசினால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகள், அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள், இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளனங்களால் நடத்தப்பட்ட சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள், மத்திய அரசின் விளையாட்டு அமைச்சகம், இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்குபெற்றவர்கள் விண்ணப் பிக்கலாம். மேலும் 2018 ஏப்ரல் முதல் தேதியன்று 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ.6 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்கவேண்டும். எனவே தகுதியான விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் வருகிற 21-ந் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். 

Next Story