அரியலூர்: தீக்குளித்து பெண் தற்கொலை


அரியலூர்: தீக்குளித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 1 March 2019 10:45 PM GMT (Updated: 1 March 2019 9:43 PM GMT)

அரியலூர் அருகே தீக்குளித்து பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.

செந்துறை,

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குவாகம் கிராமத்தை சேர்ந்தவர் குமார் மனைவி கசப்பா(வயது 30). இவருக்கு 14 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் குமார், மாற்றுத்திறனாளி பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு கசப்பா வீட்டில் இருந்தபோது தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீவைத்து கொண்டார். இதனை பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குவாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story