நன்னிலம் அருகே பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது


நன்னிலம் அருகே பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 7 March 2019 10:15 PM GMT (Updated: 7 March 2019 7:11 PM GMT)

நன்னிலம் அருகே பேரளத்தில் பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

நன்னிலம்,

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். கடந்த ஜனவரி மாதம் 19-ந் தேதி காலையில் இவர் வழக்கம்போல் வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மாணவியின் தந்தை பேரளம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் அந்த மாணவி திருப்பூரில் இருப்பதாக பேரளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் திருப்பூர் சென்று மாணவியையும், அவருடன் இருந்த ஒரு வாலிபரையும் பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவர், நன்னிலம் அருகே உள்ள முடிகொண்டான் சமத்துவபுரத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் சிவக்குமார்(வயது 23) என்பதும், இருவரும் 2 ஆண்டுகளாக காதலித்ததாகவும், இருவரும் வீட்டை விட்டு ஓடி திருப்பூர் வந்து திருமணம் செய்து கொண்டதும், அந்த மாணவி தற்போது கர்ப்பமாக இருப்பதும் தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய சிவக்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார், மாணவியை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை செய்து தஞ்சாவூரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கவும் முடிவு செய்துள்ளனர்.

Next Story