சிறுபான்மையின மக்கள் பா.ஜனதாவுக்கு ஓட்டுப்போட வேண்டாம் - சித்தராமையா பேச்சு
ஹாசன் தொகுதியில் காங்கிரஸ் கூட்டணியில் ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் மந்திரி எச்.டி.ரேவண்ணாவின் மகன் பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிடுகிறார்.
பெங்களூரு,
ஹாசனில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரஜ்வல் ரேவண்ணாவை ஆதரித்து சித்தராமையா பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
சிறுபான்மையினரான முஸ்லிம், தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவுகளை சேர்ந்த மக்கள் பா.ஜனதாவுக்கு ஒரு ஓட்டுக்கூட போட வேண்டாம். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் மறைந்து, சர்வாதிகாரம் வந்துவிடும். அதனால் உங்களை இருகரம் கூப்பி கேட்டுக் கொள்கிறேன், பா.ஜனதாவை தோற்கடியுங்கள்.
பா.ஜனதா வெற்றி பெற்றால், மோடி 2-வது ஹிட்லராக மாறிவிடுவார். வேலை வாய்ப்பு எங்கே என்று கேட்டால், பக்கோடா விற்பனை செய்யுங்கள் என்று மோடி சொல்கிறார்.
இவ்வாறு சித்தராமையா பேசினார்.
Related Tags :
Next Story