மின்சார அடுப்பில் வெந்நீர் போட முயன்றபோது மின்சாரம் தாக்கி நர்ஸ் பலி


மின்சார அடுப்பில் வெந்நீர் போட முயன்றபோது மின்சாரம் தாக்கி நர்ஸ் பலி
x
தினத்தந்தி 21 April 2019 4:00 AM IST (Updated: 21 April 2019 1:22 AM IST)
t-max-icont-min-icon

மின்கசிவு காரணமாக அடுப்பில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. இதை அறியாமல் மின்சார அடுப்பின் சுவிட்ச்சில் கை வைத்த லூனாவை மின்சாரம் தாக்கியது.

திருவொற்றியூர்,

சென்னை தண்டையார்பேட்டை, தண்டையார்நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் காட்வின். இவருடைய மனைவி லூனா பெட்ரிசியா(வயது 45). இவர், அதே பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார்.

நேற்று காலை லூனா, வீட்டில் குளிப்பதற்கு வெந்நீர் போடுவதற்காக மின்சார அடுப்பு சுவிட்சை போட்டார். அப்போது மின்கசிவு காரணமாக அடுப்பில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. இதை அறியாமல் மின்சார அடுப்பின் சுவிட்ச்சில் கை வைத்த லூனாவை மின்சாரம் தாக்கியது.

இதில் தூக்கி வீசப்பட்ட அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக காசிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து லூனா உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
1 More update

Next Story