மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபருக்கு 5 ஆண்டு சிறை


மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபருக்கு 5 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 29 April 2019 10:31 PM GMT (Updated: 29 April 2019 10:31 PM GMT)

மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.

திருப்பூர்,

பல்லடம் பெருந்தொழுவை சேர்ந்தவர் கார்த்திக்(வயது 31). கூலித்தொழிலாளி. கடந்த 14-1-2018 அன்று அந்தப்பகுதியில் கோவில் திருவிழா நடந்துள்ளது. அந்த விழாவுக்கு 17 வயது மாணவி வந்துள்ளாள். பின்னர் இயற்கை உபாதையை கழிப்பதற்காக காட்டுப்பகுதிக்கு சென்றபோது, கார்த்திக் அந்த மாணவியை வாயை பொத்தி தூக்கிச்சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மாணவி சத்தம் போட, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்ததும் கார்த்திக் அங்கிருந்து தப்பினார்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பல்லடம் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கார்த்திக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 1 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு கூறினார். அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் பரிமளா ஆஜராகி வாதாடினார்.


Next Story